கார்த்தி படத்திற்காக 2 கோடி அளவில் அமைக்கப்படும் பிரம்மாண்ட செட்!
கார்த்தி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘சர்தார்’ படத்திற்காக 2 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போது
சர்தார்
வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் கார்த்தி நடிக்கவுள்ளார். ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் என இரு நடிகைகள் கதாநாயகிகளாக இப்படத்தில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படம் குறித்த தற்போதைய அப்டேட் என்னவென்றால், சர்தார் படத்திற்காக ரூ .2 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருகிறதாம்.
கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் வெளியே எங்கும் சென்று படப்பிடிப்பு நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மிகப்பெரிய செட் அமைத்து படத்தின் பெரும்பாலான பகுதிகளை அந்த செட்டிலே வைத்து படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் செட் அமைக்கும் செட்டில் படப்பிடிப்பு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தளர்ந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.