தண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு… மீண்டும் அழைத்து வரப்பட்ட போட்டியாளர்கள்!

தண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு… மீண்டும் அழைத்து வரப்பட்ட போட்டியாளர்கள்!

பரபரப்பாக நடந்து வரும் பிக்பாஸ் 4-வது சீசனில் தற்போது தடை ஏற்பட்டுள்ளது. ஆம், சென்னை மக்களை சுழட்டி சுழட்டி அடித்த புயல் பிக்பாஸ் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து பெய்து வந்த கனமழையில் பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் கட்டமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டை மழை நீர் சூழ்ந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் உட்பட பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் பீதியான போட்டியாளர்கள் போட்டியை விட்டு விலகும் முடிவுக்கே வந்துவிட்டனர்.

தண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு… மீண்டும் அழைத்து வரப்பட்ட போட்டியாளர்கள்!
Rep Image

பின்னர் தீவிர பாதுகாப்புடன் போட்டியாளர்கள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அது உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது.

போட்டியாளர்கள் அனைவரும் விஜய் டிவியின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வி.ஐ.பி ரூம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனராம்.

Image

நேற்று பிக்பாஸ் வீட்டில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் துரிதமாக நடந்துள்ளது. பின்னர் மீண்டும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்தவித தடையுமின்றி மீண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this story