சிம்பு-கெளதம் மேனன் கூட்டணியில் இணைந்த இசைப்புயல்

சிம்பு-கெளதம் மேனன் கூட்டணியில் இணைந்த இசைப்புயல்

கௌதம் மேனன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு மூன்றாவது முறையாக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

சிம்பு-கெளதம் மேனன் கூட்டணியில் இணைந்த இசைப்புயல்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற கார்த்திக் கதாபாத்திரமும் ஜெஸ்ஸி கதாபாத்திரமும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. காதலை இவ்வளவு மென்மையாக சொன்ன கௌதம் மேனுக்கும், அழகான நடிப்பை வெளிப்படுத்திய சிம்புக்கும், இசையால் ரசிகர்களை கட்டியிழுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன.

சிம்பு-கெளதம் மேனன் கூட்டணியில் இணைந்த இசைப்புயல்

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு இந்த கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. இதில் மஞ்சிமா கதாநாயகியாக நடித்திருந்தார். வழக்கமான கௌதம் மேனன் படம் என்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இந்த நிலையில் சிம்பு-கௌதம் மேனன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதையடுத்து இந்த கூட்டணியில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இணைந்துள்ளார். இந்தத் தகவலை கெளதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கௌதம் மேனன், சிம்பு, ரகுமான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story