பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிப்பதற்காகத் தான் விஜய் சைக்கிளில் சென்றாரா? இதோ உண்மை காரணம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிப்பதற்காகத் தான் விஜய் சைக்கிளில் சென்றாரா? இதோ உண்மை காரணம்!

நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்ததற்கான காரணத்தை அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மக்கள் விறுவிறுப்புடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

திரைத்துறை பிரபலங்கள் காலையில் முதல் ஆளாக அவரவர் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் விஜய் சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சோசியல் மீடியா முழுவதும் விஜய் சைக்கிளில் சென்ற விஷயம் தான் ஹாட் டாபிக்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிப்பதற்காகத் தான் விஜய் சைக்கிளில் சென்றாரா? இதோ உண்மை காரணம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாகத் தான் விஜய் சைக்கிளில் வந்தார் என்று பலர் சோசியல் மீடியாக்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில், விஜய் தரப்பிலிருந்து இதுகுறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளனர். விஜய் சைக்கிளில் சென்றதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிப்பதற்காகத் தான் விஜய் சைக்கிளில் சென்றாரா? இதோ உண்மை காரணம்!

விஜய்யின் வாக்குச் சாவடி அவரது வீட்டிற்குப் பின்னால் இருந்ததாகவும், சாவடிக்குச் செல்லும் சாலைகள் குறுகலாக இருப்பதால் கார் உள்ளே சென்று வர கடினமாக இருக்கும் என்பதாலும் தான் சைக்கிளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். இதுதான் விஜய் சைக்கிளில் வாக்குச் சென்றதற்கான காரணமே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Share this story