பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று நுழையப் போகும் பிரபலம் இவர் தான்… அப்போ பரபரப்புக்கு பஞ்சமில்லை!

பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று நுழையப் போகும் பிரபலம் இவர் தான்… அப்போ பரபரப்புக்கு பஞ்சமில்லை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர் நுழைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசனில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ஆஜித், ரேகா, ஜித்தன் ரமேஷ், ஆரி, அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ரியோ, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம், பாலா, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர்.

Image

வைல்ட் கார்டு என்ட்ரியில் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். முதல் எலிமினேஷனில் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார்.

விதமான விதமான போட்டியாளர்கள், டாஸ்க்குகள் சண்டை, சச்சரவுகள் என பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது இந்த பிக்பாஸ் சீசன். தற்போது அடுத்த ஆட்டத்துக்கு பிக்பாஸ் குழுவினர் தயாராகியுள்ளனர். ஆம், இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியில் ஒரு போட்டியாளர் இந்து பிக்பாஸ்வீட்டிற்குள் நுழைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று நுழையப் போகும் பிரபலம் இவர் தான்... அப்போ பரபரப்புக்கு பஞ்சமில்லை!

சில தினங்களுக்கு முன்னரே இரண்டாவதாக உள்ளே நுழையப் போகும் நபர் பாடகி சுசித்ரா தான் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது சுசித்ரா தான் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபலம் என்று உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகை கஸ்தூரி வெளியிட்டிருந்த பதிவிலும் சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Share this story