என் மருமகனை கையில் வைத்திருப்பது சிரஞ்சீவியே கையில் இருப்பது போல இருக்கிறது… துருவா சார்ஜா உருக்கம்!

என் மருமகனை கையில் வைத்திருப்பது சிரஞ்சீவியே கையில் இருப்பது போல இருக்கிறது… துருவா சார்ஜா உருக்கம்!

இன்று நடிகை மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் சிரஞ்சீவி சார்ஜாவின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் மகனாகப் பிறந்திருக்கிறார் என்று அனைவரும் மேக்னா ராஜிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த குழந்தையின் வருகையால் துருவா சார்ஜா பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். துருவா குழந்தையை கையில் ஏந்தி பிரமிப்புடன் பார்க்கும் புகைப்படங்கள் பார்ப்போரை நெகிழச் செய்கின்றன.

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துருவா “எங்கள் குடும்பத்திற்கு ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தை வந்துவிட்டது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேகனாவும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். இதற்காக நான் பகவான் அனுமனுக்கு நன்றி கூறுகிறேன். என் மருமகனைப் கையில் வைத்திருப்பது சிரஞ்சீவியை வைத்திருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. அவர் சிருவின் மகன். இந்த உணர்வு இணையற்றது, அதை என்னால் விளக்க முடியாது ” என்று தெரிவித்தார்.

சிரஞ்சீவி இறப்பதற்கு முன்பு அவருடன் நடந்த ஒரு உரையாடலையும் துருவா நினைவு கூர்ந்தார்.

Image


“நீ சீக்கிரம் அப்பாவாகப் போகிறாய். உன் மகனும் உன்னைப் போல இருந்தால் எப்படி இருக்கும் என்று சிருவிடம் விளையாட்டுத்தனமாகக் கேட்டேன். நாம் பள்ளியில் படிக்கும் போது உன் மீது நிறைய புகார்கள் வரும், அதற்காக நம் அப்பா அம்மா அடிக்கடி பள்ளிக்கு அழைக்கப்படுவார்கள். அதற்கு எனக்கும் ஒரு மகன் பிறப்பான், நானும் நிறைய புகார்களைப் பெறுவேன்” என்று சிரு கூறியதாகவும் அவர் விருப்பம் நிறைவேறியதாகவும் துருவா தெரிவித்தார்.

Share this story