விருது கோப்பையில் மது அருந்திய பாப் பாடகரால் சர்ச்சை

விருது கோப்பையில் மது அருந்திய பாப் பாடகரால் சர்ச்சை 

இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதன், 66-வது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவின் ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவனின் ஃபியூஷன் இசைக்குழுவான சக்தி இசைக்குழுவுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 


இந்நிலையில், கிராமி விருது வென்ற பாப் பாடகர் ஜெ இசட், விருது கோப்பையில் மது அருந்தி கொண்டாட்டத்தி்ல ஈடுபட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. 

Share this story