"ஒரு நாளைக்கு மட்டும் 30000-க்கும் மேல் உதவிக்காக கோரிக்கைகள் வருகின்றன"… நடிகர் சோனு சூட்!
இதுவரை உதவி கேட்டு 32000-க்கும் மேற்பட்ட கோரிக்கைள் வந்துள்ளதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து நம்பிக்கை அற்று கண்ணீருடன் நின்ற ஏழைகளின் முன் தன்னுடைய உதவிகள் மூலம் கடவுளாகத் தென்பட்டார் சோனு சூத். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். பின்னர் மாஸ்கோவில் சிக்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டதாரி மாணவர்கள் இந்தியா திரும்ப சோனு சூத் ஒரு விமானத்தை ஏற்பாடு செய்தார். இன்னும் லிஸ்ட் கொண்டே தான் போகிறது.
“1137. மெயில்கள்.
19000. பேஸ்புக் மெசேஜ்கள்
4812. இன்ஸ்டா மெசேஜ்கள்
6741. ட்விட்டர் மெசேஜ்கள்.
இன்றைக்கு உதவி கேட்டு வந்த மெசேஜ்கள்.
சராசரியாக இவை உதவி கேட்டு பெறும் கோரிக்கைகளின் எண்ணிக்கை. ஒரு மனிதனாக அனைவர்க்கும் உதவி செய்வது முடியாத காரியம். நான் இன்னும் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். உங்கள் கோரிக்கையை நான் தவறவிட்டிருந்தால் மன்னியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
1137. mails.
19000. fb messages
4812. Insta messages
6741. twitter messages.
Today’s HELP messages.
On an average these are the number of requests I get for HELP. It is humanly impossible to reach out to everyone. I still try my best.
Apologies if I missed your message🙏— sonu sood (@SonuSood) August 20, 2020