நடிகை ‘கயல்’ ஆனந்தி படத்திற்கு திடீர் தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

நடிகை ‘கயல்’ ஆனந்தி படத்திற்கு திடீர் தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

‘கமலி From நடுக்காவேரி’ படத்தை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நடிகை ‘கயல்’ ஆனந்தி படத்திற்கு திடீர் தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கமலி ஃபிரம் நடுக்காவேரி’. ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ள இப்படத்தை அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. கடந்த 19ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்று திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நடிகை ‘கயல்’ ஆனந்தி படத்திற்கு திடீர் தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இந்நிலையில் ஒப்பந்தபடி தங்களிடம் வெளிநாட்டு உரிமைக்கு அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு, இந்த படத்தை வெளிநாடுகளில் வெளியிட மாஸ்டர் பீஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் 2கே ஸ்டூடியோஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

நடிகை ‘கயல்’ ஆனந்தி படத்திற்கு திடீர் தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்கள் நிறுவனத்திற்கு வெளிநாட்டு உரிமையை தராமல் இந்த படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த படத்தை வரும் மார்ச் 1-ம் தேதி வரை வெளிநாடு மற்றும் இணையத்தில் வெளியிட தடை விதித்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்க படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.

Share this story