தற்பெருமை பேசி தம்பட்டம் அடிக்கும் கங்கனா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தற்பெருமை பேசி தம்பட்டம் அடிக்கும் கங்கனா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ‘தாணு வெட்ஸ் மானு’ என்ற ரொமான்டிக் காமெடி படம் வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

எனவே கங்கனா நடிகை ஸ்ரீதேவிக்குப் பிறகு பெண் காமெடி ஜேர்னர் படத்தில் நடித்த ஒரே நடிகை நான் தான் என்று தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கங்கனா மற்றும் மாதவன் நடிப்பில் அந்தப் படம் வெளியானது.

தற்பெருமை பேசி தம்பட்டம் அடிக்கும் கங்கனா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

“நான் கசப்பான/ வழக்கமான கதாப்பாத்திரங்களில் சிக்கிக்கொண்டேன். இந்தப் படம் எனது சினிமா பயணத்தையே மாற்றியது. அதுவும் நகைச்சுவையுடன். இந்த மாதிரி காமெடி ஜேர்னரில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி ஜிக்கு பிறகு நடித்த ஒரே நடிகையாக ஆனேன்.”

இந்த அங்கீகாரத்தை வழங்கிய ஆனந்த்ல்ராய் மற்றும் எங்கள் எழுத்தாளர் ஹிமான்ஷு ஷர்மா ஆகியோருக்கு நன்றி. அவர்கள் இயக்குநராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் என்னிடம் வந்தபோது, ​​நான் அவர்களின் வாழ்க்கையை உருவாக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் என் வாழ்க்கையை உருவாக்கினர். எந்த படம் வேலை செய்யும், எந்த படம் வேலை செய்யாது என்பதை யாராலும் சொல்ல முடியாது. எல்லாம் விதிப்படி தான் நடக்கும். என் வாழ்க்கையில் நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

தற்பெருமை பேசி தம்பட்டம் அடிக்கும் கங்கனா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

கங்கானாவின் இந்தப் பதிவை அடுத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். எப்போதும் தற்பெருமை பேசிவருவதாகவும், ஸ்ரீ தேவியுடன் தன்னைத் தானே ஒப்பிட்டு பெருமிதம் தேடிக் கொள்வதாகவும் நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே தலைவி படத்தில் தனது உடலை 20 கிலோ வரை ஏற்றி இறக்கினார் கங்கனா. பின்னர் இந்தியாவிலேயே இதைச் செய்துள்ள ஒரே நடிகை நான் தான் என்று தெரிவித்தார். அதுவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this story