ஏ.ஆர். ரஹ்மான் தங்கையின் ‘எந்தையும் தாயும்- வந்தேமாதரம்’ ஆல்பம்

கனிமொழி

குடியரசு தினத்தை  முன்னிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின்  தங்கையும்  இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து  பாடிய மகாகவி  பாரதியார் எழுதிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்" பாடல் இன்று வெளியாக உள்ளது.

arr
 
நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார். மேலு‌ம் இப் பாடலை தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் பெறு மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.
தேசப்பற்றுமிக்க இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் அவர்கள்  இயக்கியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு ஒளிப்பதிவாளர் குருதேவ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

நாட்டுப்பற்றுமிக்க இப்பாடலின் முதல் பிரதியை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர், கனிமொழி கருணாநிதி அவர்கள் பெற்றுக்கொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 


 

Share this story