11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால்

vishal

சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால், 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஷால். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் நடிகர் விஷால் ஹீரோவாக தமில் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து 'சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை என வெற்றி திரைப்படங்களை கொடுத்த தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார் விஷால். இந்நிலையில், நடிகர் விஷால் சென்னை மாத்தூரில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார். திருமணத்தின் போது 3 மத முறையிலும் வழிபட்டு, மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்தார். அதன்பின்னர் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் விஷால், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததில் அரசியல் எதுவும் கிடையாது" என்று கூறினார். மேலும் தாஜ்மகாலைப் பார்க்கும் போது ஷாஜகானை நினைத்து நாம் வியப்பது போல், காசி நகரைப் பார்த்த போது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தோன்றியதாகவும், அதன் காரணமாகவே ஒரு சாதாரண குடிமகனாக தன் மனதில் தோன்றியதை பிரதமரிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

Share this story