பிரதமர் மோடியை புகழ்ந்து பதிவிட்டதில் அரசியல் இல்லை - நடிகர் விஷால்

vishal

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதில் அரசியல் எதுவும் இல்லை என நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஷால். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் நடிகர் விஷால் ஹீரோவாக தமில் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து 'சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை என வெற்றி திரைப்படங்களை கொடுத்த தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை படைத்துள்ளார் விஷால். இந்த நிலையில், நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். பின்னர் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" இவ்வாறு பதிவிட்டு இருந்தார். 

modi

இந்நிலையில், நடிகர் விஷால் பாஜகவில் சேரவுள்ளதாகவும், அதனாலயே பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளதாக்வும் பேசப்பட்டது. இந்நிலையில், இதற்கு நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், "நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப் படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார். 

Share this story