பொது இடத்தில் கணவன் கொடுத்த முத்தம்.. சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரேயா !

Shriya saran

பொது இடத்தில் நடிகை ஸ்ரேயாவின் கணவர் முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரேயா, கடந்த 2003ம் ஆண்டு வெளியான எனக்கு ‘20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பல மொழிகளில் இவருக்கு  ரசிகர்கள் உள்ளனர்.

Shriya saran

திரைப் படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற ரஷ்ய டென்னீஸ் வீரரை, காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்'  படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். 

Shriya saran

இதையடுத்து த்ரிஷ்யம் 2 இந்தியில் உருவாகி சமீபத்தில் வெளியானது. இந்த படம் தற்போது கோடி ரூபாயை வசூலித்த நிலையில் ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவ் ஆகிய இருவரும் பார்க்க சென்றனர். அப்போது ஒரு காட்சியின் போது ஸ்ரேயாவிற்கு கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவ் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

பொது இடத்தில் எப்படி இப்படி முத்தம் கொடுக்கலாம் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் நடிகை ஸ்ரேயா விளக்கம் அளித்துள்ளார். அதில் இந்த விஷயம் வேடிக்கையாக இருக்கிறது. சிறப்பான தருணங்களில் ஆண்ட்ரே கோஸ்சீவ் முத்தம் கொடுப்பது சாதாரணமான ஒன்று. அதை நான் சிறப்பானதாகவே கருதுகிறேன். இதுபோன்ற இயல்பான விஷயத்தை பெரிதுப்படுத்துவது தேவையற்றது என்று கூறினார். 

 

 


 

Share this story