அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கும் அருண் மாதேஸ்வரன்.. தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ புதிய அப்டேட் !

captain miller

தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

ராக்கி, சாணிக் காயிதம் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

captain miller

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் விநாயகம், சிவ் ராஜ்குமார், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடங்கியது. இதில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில்  இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி துவங்குகிறது. இதில் தனுஷ் மற்றும் சிவ் ராஜ்குமார் இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Share this story