பாபி சிம்ஹா படத்தை முடித்த முன்னணி நடிகை... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் !
பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் 'தடை உடை' படத்தில் நடிகை ரோகிணியின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் என்.எஸ்.ராகேஷ் இயக்கத்தில் பிரபல நடிகரான பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'தடை உடை'. இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக மிஷா நராங் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முத்ராஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆதிஃப் இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து இப்படத்திற்கு பாடல்களை எழுதுகிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.

இந்த இடத்தை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் முன்னணி நடிகை ரோகினி நடித்து வந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதை நடிகை ரோகிணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

