கங்கனாவால் தாமதமாகும் ‘சந்திரமுகி 2’.. குமுறும் படக்குழுவினர் !

kangana ranaut
நடிகை கங்கனாவால் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் பல ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை கங்கனா சந்திரமுகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

kangana ranaut

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். 

kangana ranaut

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கங்கனாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்புடனே படப்பிடிப்பிற்கு வந்து செல்கிறார். இவர் வரும்போது ஜிம் பாய்ஸ், மேக்கப் மேன் உள்ளிட்ட ஒரு கூட்டத்தை அழைத்து வருகிறார். இதனால் தினந்தோறும் படப்பிடிப்பு நடத்துவது போராட்டமாகவே இருப்பதாக படக்குழுவினர் குமுறுகின்றனர். கங்கனாவின் இந்த செயலால் தான் படப்பிடிப்பு மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை விரைந்து முடிக்காமல் பி வாசு சிரமப்பட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Share this story