பிரம்மாண்ட செட் இல்லை... டென்ஷனாக தனுஷ்.. ‘கேப்டன் மில்லர்’ படம் நிறுத்தமா ?

captain miller

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தை 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

captain miller

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிரீயட் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றிற்காக செட் அமைக்கப்பட்டது. இந்த செட் பார்த்த தனுஷ், அதிருப்தி அடைந்தாராம். இப்படிப்பட்ட காட்சிக்கு இந்த செட் செட்டாகாது என்று கூறிவிட்டு கோபமாக அங்கிருந்து புறப்பிட்டு சென்றுவிட்டாராம். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story