இரு சூப்பர் ஹிட் படங்கள்... தூசு தட்டும் இயக்குனர் செல்வராகவன் !

selvaraghavan

இரண்டு சூப்பர் படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் செல்வராகவன் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனரான அவர், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

selvaraghavan

பிசியான இயக்குனராக இருந்து வந்த செல்வராகவன், சமீபகாலமாக நடிகராக உருமாறி, பீஸ்ட், சாணிக் காயிதம் ஆகிய படங்களில் சிறந்த நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி வைத்துள்ளார். கடைசியாக மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ படத்தில் நடித்துள்ளார். 

selvaraghavan

இதற்கிடையே கடைசியாக தனுஷை வைத்து அவர் இயக்கிய ‘நானே வருவேன்’ படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனால் தன்னுடைய சூப்பர் ஹிட் திரைப்படங்களான புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி ஆகிய இரண்டும் படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்க செல்வராகவன் முடிவு செய்துள்ளாராம். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story