சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ நிறுத்தப்பட்டதா ?.. வெளியானது புதிய தகவல்

Maaveeran
 சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் நிறுத்தப்பட்டதாக வந்த தகவலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

'மண்டேலா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் இயக்குனர் மடோன் அஸ்வின். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22-வது படமாக உருவாகிறது. படத்திற்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

நடிகை அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பிரின்ஸ் படத்தைத் தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். 

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், 40 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு வரும் 7-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக வந்த தகவலில் உண்மையில் என்று தகவல் கசிந்துள்ளது. 

Share this story