விரைவில் வெளியாகிறது ‘பத்து தல’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்.. புதிய தகவல் !
சிம்புவின் பத்து தல’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.
இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங்கை பிரியா பவானி சங்கர் நிறைவு செய்தார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.