ஜிப்ரான் இசையில் ‘யாரோ யாரோ இவ’ பாடல்.. அதர்வாவின் ‘பட்டத்து அரசன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

PattathuArasan

 அதர்வா மற்றும் சற்குணம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களை எளிதில் கவரும் நாயகனாக இருக்கிறார் அதர்வா. அதனால் அவரது திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அதர்வாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பட்டத்து அரசன்’. இந்த படத்தை களவாணி, களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம் இயக்கியுள்ளார்.

PattathuArasan

 லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வாவுக்கு ஜோடியா ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ‘யாரோ யாரோ இவ’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. மெலோடியில் உருக வைக்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story