வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ‘வுல்ஃப்’.. பிரபுதேவா படத்தின் முக்கிய அப்டேட்

wolf
 பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘வுல்ஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 

பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வுல்ஃப்’. இந்த படத்தை ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கிய வினு வெங்கடேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

wolf

பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

wolf

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் பிப்ரவரி இறுதியில் மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இயக்குனர் வினு வெங்கடேஷ், இப்படம் வரலாற்று காலத்திலிருந்து தற்காலம் வரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை படமாக உருவாகி வரும் இப்படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவரும் ஓநாயின் குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதான் இப்படத்தின் கதையாகும். 

 

 

Share this story