பிரபு சாலமனின் ‘செம்பி’ படத்தை கைப்பற்றிய உதயநிதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
பிரபு சாலமனின் ‘செம்பி’ படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காடு சார்ந்த திரைப்படங்களை இயக்கி வரும் பிரபு சாலமனின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’. இந்த படத்தில் நடிகை கோவை சரளா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ படத்தின் புகழ் அஸ்வின்குமார் கதாநாயனாக நடிக்கிறார். அஸ்வினுக்கு ஜோடியாக ரேயா நடித்துள்ளார்.
இந்தப் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இவர்களுடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க பஸ் ஒன்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.