மீண்டும் படம் இயக்கும் சசிகுமார்.. விரைவில் அறிவிப்பு !

sasikumar

 மீண்டும் திரைப்படம் இயக்கவுள்ள இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். 

பிரபல இயக்குனராக சசிகுமார் நடிப்பில் ‘காரி’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை  பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார்.  மேலும் இந்த படத்தில் சக்ரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

sasikumar

டி இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து கதைக்களத்தில் ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

sasikumar

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், அடுத்த ஆண்டு மீண்டும் படம் இயக்குகிறேன். அனைத்தும் உறுதியாகிவிட்டது. விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். சசிகுமார் மீண்டும் படம் இயக்கவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story