இலங்கைக்கு செல்லும் சூர்யா.. புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்

suriya 42
 ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் இலங்கைக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காட்டார், முக்காட்டார், அரத்தார், மாண்டாங்கர், பெருமனத்தார் என 5 வேடங்களில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இரு பாகங்களாக உருவாக இரு பாகங்களாக உருவாகி வரும் யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. 

3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். பிரம்மாண்டமாகும் தயாராகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. 

suriya 42

வரலாற்று பின்னணி கொண்டு இப்படம் உருவாகவிருப்பதால் பல நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, செர்பியா ஆகிய நாடுகளிலும், அதன்பிறகு கிழக்கு நாடுகளான கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிஜி ஆகிய 6 நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெற உள்ளது. இதற்காக சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை செல்லவுள்ளனர். அங்கு பிரம்மாண்டமாக காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர். ‘சூர்யா 42’ படம் குறித்து வெளியாகும் அப்டேட்டுகள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

Share this story