தோனி தயாரிக்கும் தமிழ் படம்.. நாளை தலைப்பு அறிவிப்பு !

dhoni
தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. தற்போது அவர் தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் என்ற புதிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளது. 

dhoni

தோனிக்கு தமிழகம் பழக்கப்பட்ட இடம் என்பதால் முதலில் தமிழில் ஒரு படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ள கதையை தான் முதலில் படமாக எடுக்கவுள்ளார். இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளார். 

dhoni

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த படத்தில் ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story