நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி... விஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வம்சி !
‘வாரிசு’ வெற்றியால் மகிழ்ச்சியடைந்த இயக்குனர் வம்சி, விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘தோழா’ படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி, தமிழில் இயக்கிய திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். வழக்கமான ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய், இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
வரும் பொங்கலையொட்டி இப்படம் இன்று வெளியானது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்திற்கு டிக்கெட் புக்கிங் புல்லாகியிருக்கும் நிலையில் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளதால் ‘வாரிசு’ திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும், நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர். அப்போது படத்தின் வெற்றிக்கு இருவரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் வம்சி, ‘வாரிசு’ படத்தின் மீது ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு மிக்க நன்றி. நண்பா, நன்பிக்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.