விரைவில் உங்கள் இல்லங்களில் 'தி லெஜண்ட்'.. ஹாப்பி நியூஸ் சொன்ன அண்ணாச்சி !
விரைவில் 'தி லெஜண்ட்' திரைப்படம் உங்கள் இல்லங்களுக்கு வரும் என சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் கூறியுள்ளார்.
ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கிய திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தில் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான அருள் சரவணன், கதாநாயகனாக நடித்திருந்தார். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.
இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அறிவியல் சார்ந்து உருவான இந்த படத்தில் விஞ்ஞானியாக அருள் சரவணன் நடித்திருந்தார். எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வெளியானது.
ஆனால் இந்த படம் வெளியாகி போதியை வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் சில காட்சிகள் சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. அதனால் இப்படம் ஓடிடியில் வெளியாகாது என்று அருள் சரவணன் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என அருள் சரவணன் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் நீங்கள் அனைவரும் காணும் வகையில் 'தி லெஜண்ட்' விரைவில் என்று கூறியுள்ளார்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்#TheLegend #LegendSaravanan pic.twitter.com/8Kf8IFecXl
— Legend Saravanan (@yoursthelegend) January 1, 2023