சசிகுமார் படத்திற்காக ஈசிஆரில் உருவான கிராமம்!

சசிகுமார் படத்திற்காக ஈசிஆரில் உருவான கிராமம்!

விஜயகணபதி பிக்சர் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இதை சத்ய சிவா இயக்குகிறார். இவர், 'கழுகு', 'சவாலே சமாளி', 'சிவப்பு', 'கழுகு 2' உட்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'ஜெய்பீம்' படத்தில் நடித்த மலையாள நடிகை லிஜோ மோள் ஜோஷ் சசிகுமாருக்கு நாயகியாக நடிக்கிறார். சுதேவ் நாயர், சரவணன், மாளவிகா, போஸ் வெங்கட், மு. ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

சசிகுமார் படத்திற்காக ஈசிஆரில் உருவான கிராமம்!

'1995-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை தழுவி இப்படம் உருவாகி வருகிறது. இதனால், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரிய கிராமம் ஒன்றை அரங்கம் போல அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறனர். படத்தின் தலைப்பு, டீசர்,டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Share this story