ரசிகர்களுக்கு பணத்தை திரும்பத் தர தொடங்கியது ஏசிடிசி நிறுவனம்

ரசிகர்களுக்கு பணத்தை திரும்பத் தர தொடங்கியது ஏசிடிசி நிறுவனம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ம் தேதி மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் வந்தனர்.

முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனமும் மன்னிப்பு கோரியது. இதனிடையே 4 ஆயிரம் பேர் பணத்தை திரும்பிக் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். 

இந்நிலையில், ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் பணியில் ஏசிடிசி நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது. இதனை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


 

Share this story