மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ விருது... முதல்வருக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த் !

puneeth rajkumar

 மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளார். 

கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு மரணமடைந்தார். உச்ச நட்சத்திரமாக இருந்த அவரின் மறைவு திரையுலகில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. 46 வயதே ஆகும் அவரின் திடீர் மறைவு இன்றுவரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

puneeth rajkumar

இதையடுத்து கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1-ஆம் தேதி மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். புனித் ராஜ்குமாரை கௌரவிக்கும் விதமாக நடைபெறும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. 

puneeth rajkumar

இந்நிலையில் இந்த விழாவில் தான் பங்கேற்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிததத்தில், இந்த வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள். நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் கர்நாடக ரத்னா விருது விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

puneeth rajkumar
 

Share this story