‘குட் நைட்’ பட வெற்றியை தொடர்ந்து மணிகண்டனின் அடுத்த படம் – துவக்கிவைத்த விஜய்சேதுபதி.

photo

சமீபத்தில் வெளியான ‘குட் நைட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் படைத்தது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து குட் நைட் பட தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்  மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ்  இணைந்து மணிகண்டனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கின்றனர். அதற்கான சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

photo

சமகால காதலை மைய்யமாக வைத்து  தயாராகும் இந்த படத்தை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரபுராம்.  ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் மணிகண்டனுடன் இணைந்து ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணாரவி ஆகியோர் நடிக்கின்றனர். சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு  நடக்க இருப்பதாக கூறப்படுகிறது அதன் முதல் பகுதியாக சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கி வைத்தார் விஜய்சேதுபதி. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story