முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ்...

நடிகர் பிரகாஷ் ராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சினிமா மட்டுமின்றி அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துக்களையும் பகிர்ந்து வருபவர். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
திரைக்கலைஞரும் - சமூக செயற்பாட்டாளருமான @prakashraaj சார், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்த போது நாம் உடன் இருந்தோம்.
— Udhay (@Udhaystalin) May 6, 2025
இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பை - மதச்சார்பின்மையை காப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும்… pic.twitter.com/APyaOxgjgz
இந்த சந்திப்பு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நாட்டின் அரசியலமைப்பு, மதச் சார்பின்மையை காப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும்' என்பது உள்ளிட்ட பல ஆழமான கருத்துக்களை பிரகாஷ் ராஜ் பகிர்ந்து கொண்டார்.அவருடைய திரையுலகப்பணி மட்டுமன்றி, சமூகப்பணியும் சிறக்கட்டும். உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். என தெரிவித்துள்ளார்.