நாளை இமயமலை செல்லும் ரஜினிகாந்த்.. திடீர் பயணத்திற்கு காரணமென்ன ?

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை இமயமலைக்கு செல்கிறார். 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.

rajinikanth

பொதுவாக தனது ஒவ்வொரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் நடிகர் ரஜினி இமயமலைக்கு செல்வது வழக்கம். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கத்தை வைத்துள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவு மற்றும் கொரானா பிரச்சினை காரணமாக இமயமலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் நாளை காலை இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்கிறார். அங்கு 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலா பயணம் செல்லவுள்ள ரஜினி, அங்குள்ள பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவுள்ளார். ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நீண்ட இடைவெளிக்கு பிறகு இமயமலை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story