கவுண்டமணிக்கு முதல் ஆளாக வந்து ஆறுதல் கூறிய நடிகர் சத்யராஜ்...!

goundamani

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்த நிலையில், நடிகர் சத்யராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

1980, 90களில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. காலத்தால் அழியாத பல காமெடி காட்சிகளுக்கு சொந்தக்காரர்.  குறிப்பாக கவுண்டமணியும், சத்யராஜும் இணைந்து நடித்த படங்களும், அந்தப் படங்களில் இடம்பெற்ற காமெடியும் மறக்க முடியாதவை. 
 

goundamani

இந்நிலையில்,கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது நண்பரின் மனைவி இறந்ததை அறிந்த சத்யராஜ், தேனாம்பேட்டையில் உள்ள வைக்கப்பட்டுள்ள சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மனைவியின் இழப்பால் உடைந்து காணப்படும் கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார். 
  

Share this story