‘மண்டாடி’ படம் குறித்து நடிகர் சுஹாஸ் விளக்கம்...!

‘மண்டாடி’ படம் குறித்த வதந்திக்கு நடிகர் சுஹாஸ் விளக்கமளித்துள்ளார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படம் ‘மண்டாடி’. ஆர்.எஸ். இன்ஃபோடையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன். விரைவில் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. தமிழில் சூரி நாயகனாகவும், சுஹாஸ் வில்லனாகவும், அதே போல் தெலுங்கில் சுஹாஸ் நாயகனாகவும், சூரி வில்லனாகவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை பலரும் பகிர்ந்து படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.இந்த வதந்தி தொடர்பாக சுஹாஸ் கூறும்போது, “வணக்கம். நான் நடிக்கவிருக்கும் தமிழ்ப் படம் ‘மண்டாடி’ பற்றிய ஒரு சிறிய விளக்கம் இது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் வதந்திகள் போல் அல்லாமல், இதில் வில்லனாக மட்டுமே நடிக்கிறேன். சூரி அண்ணா நாயகனாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.