‘ரெட்ரோ’ பட விழாவில் அடுத்த பட அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா...!

surya


‘ரெட்ரோ’ பட விழாவில் தனது அடுத்த படத்தினை நடிகை சூர்யா அறிவித்துள்ளார் 

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. இதன் தெலுங்கு விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
 surya
 
இந்த விழாவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அடுத்ததாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். அது தமிழ் படமாக உருவானாலும், பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் தான் படமாக்கவுள்ளதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா.‘ரெட்ரோ’ படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது. இதனை முடித்துவிட்டு தான் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா.

Share this story