இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் உன்னி முகுந்தன்...

மலையாளத்தின் முன்னணி நடிகரான உன்னி முகுந்தன் அடுத்து சூப்பர் ஹீரோ படம் ஒன்றின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார்.
‘மார்கோ’ படத்தின் மூலம் இந்தியளவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமானார் உன்னி முகுந்தன். தமிழில் ‘கருடன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இயக்குநராக அறிமுகமாவது குறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்த தகவலில், “எனக்குள் இருக்கும் குழந்தை, புராணக் கதைகளை நம்பி வளர்ந்தது. தைரியம், தியாகம் மற்றும் மந்திரக் கதைகளால் ஈர்க்கப்பட்டது. புத்தகங்கள், திரைப்படங்கள், நாட்டுப்புறக் கதைகள், சிறிய அதிரடி கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் மட்டுமல்ல, என் கனவுகளிலும் என் ஹீரோக்களைக் கண்டேன்.
The kid in me grew up believing in legends.
— Unni Mukundan (@Iamunnimukundan) May 5, 2025
Drawn to stories of courage, sacrifice, and magic. I found my heroes not just in books, movies, folk stories, tiny action figures but also in my dreams.
Growing up in the era of superheroes, often dismissed as mythical, make-believe,… pic.twitter.com/vfqgs9r4L2
சூப்பர் ஹீரோக்களின் சகாப்தத்தில் வளர்ந்தேன். குறிப்பாக, கனவு காண்பதை ஒருபோதும் கைவிடவில்லை. நான் எனது முதல் திரைப்படத்தை இயக்குகிறேன். அது ஒரு சூப்பர் ஹீரோ கதை. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது. இதன் திரைக்கதையை மிதுன் மானுவல் தாமஸ் எழுதுகிறார். மீதி விஷயங்கள் குறித்து விரைவில் தெரிவிப்பேன். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும், முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
நான் எனது தெலுங்கு படத்தை முடித்துவிட்டு, அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகும் இந்த மலையாளப் படத்தின் பணிகளைத் தொடங்குவேன்” என்று உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.