‘லியோ’-ல் இணையும் ஆக்‌ஷன் கிங்.. வெறித்தனமாக நடக்கும் ஷூட்டிங் !

leo

விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தில் நடிகர் அர்ஜூன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக பணியாற்றி வருகிறார். 

leo

முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கிய நிலையில் அங்கு விஜய், திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிரிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த படத்திற்காக பணியாற்றியுள்ளனர். மொத்தம் 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்பினர். 

தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நாளை முதல் நடிகர் அர்ஜூன் இணையவுள்ளார். இதற்காக கடந்த சில நாட்கள் டெஸ்ட் ஷூட் நடந்த நிலையில் நாளை படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

Share this story