நடிகர் விஜய் அரசியல் வருகை... அஜித் குமார் வாழ்த்து...!

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சக நடிகர் அஜித்குமார், தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித்குமார், பத்மபூஷன் விருது பெற குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்றபோது, தலைவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க வேண்டிய பொறுப்பின் சுமையை உணர்ந்ததாகத் தெரிவித்தார். ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தை தனது தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு என்றும் கூறினார்.

ak
அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் சக நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அஜித்குமார், தனக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்கிற விருப்பம் இல்லை என்றார். சக நடிகர்கள் அரசியலில் நுழைந்திருப்பது அவர்களது தனிப்பட்ட முடிவு என்றும் அவர்கள் நன்றாக வர வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார். தங்கள் தலைமையை இறுதியில் மக்கள் தேர்ந்தெடுப்பதுதான் ஜனநாயகத்தில் சிறந்த விஷயம் எனக் கூறிய அஜித்குமார், அரசியலுக்குள் நுழைவது என்பது 100 விழுக்காடு துணிச்சலான முடிவு என்றும் தெரிவித்தார். இந்தியா என்பது வெவ்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள் கொண்ட நாடு என்றும் அனைவருக்கும் ஏற்ற தலைவராக ஒருவர் இருக்க வேண்டும் என நினைத்தால் அது தவறு என்றும் அஜித்குமார் கூறினார்.
 

Share this story