நடிகை சமந்தாவுக்கு இப்படி ஒரு பாதிப்பா.. மருத்துவமனையில் அனுமதி..

samantha

நடிகை சமந்தா தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவதாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா.  கடந்த 2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா,  கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரை விவாகரத்து செய்தார். ரிந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம் சமந்தா தனது அடுத்தடுத்த படங்களில்  கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.   அந்தவகையில்  கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.  

samantha

தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்த சமந்தா, தற்போது  தனது அடுத்த படமான  ‘யசோதா’ ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஹரிஹரிஷ் இயக்கியுள்ள இந்த படத்தில்  வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில்  சமந்தாவின் உடல்நிலை குறித்து சில நாட்களாகவே  வதந்தி பரவி வந்தது.

இதற்கிடையே  கடந்த 2 தினங்களுக்கு முன்பு யசோதா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதுகுறித்து  தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமந்தா,  தான்  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.   அந்த பதிவில், “யசோதா படத்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.

samantha

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைப் பெற்று சரியான பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது நீண்ட காலம் எடுக்கும். நாம் எப்பொழுதும் நம்முடைய பலத்தை மட்டுமே முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் மெதுவாக உணர்கிறேன்.

நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தது. என்னால் இன்னும் ஒரு நாளைக் கடக்க முடியாது என்று உணரும் நேரத்தில் எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. இதுவும் கடந்து போகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  


 

Share this story