அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை : நடிகை ஆண்ட்ரியா பேட்டி
1722596875343
புதுச்சேரி மிஷின் வீதியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில், நடிகை ஆண்ட்ரியா பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆண்ட்ரியா, தற்போது நடிகர் கவினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். பின்னணி பாடலுக்கு பாடும் வாய்ப்பு இன்னும் வரவில்லை வந்தால் மீண்டும் பாடுவேன். என தெரிவித்தார். வரலாற்று தலைவர்கள் படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என கூறிய ஆண்ட்ரியா, வட சென்னை 2 வந்தால், கட்டாயம் அந்த படத்தில் மீண்டும் சந்திரா கதாபாத்திரத்தில் நடிப்பேன். என கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேட்டதற்கு, இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் என பதிலளித்தார். இதையடுத்து ரசிகர்கள் முன்னிலையில் தோன்றிய நடிகை ஆண்ட்ரியா, ஓ சொல்றியா மாமா... என்ற பாடலை பாடி அசத்தினார்.
#WATCH | “அரசியலுக்கு வரும் நோக்கமெல்லாம் எனக்கு எதுவும் இல்லங்க..”
— Sun News (@sunnewstamil) August 2, 2024
புதுச்சேரியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா பேட்டி#SunNews | #AndreaJeremiah | #Pondicherry | @andrea_jeremiah pic.twitter.com/mxJENBg1EF