கணவனை கட்டியணைத்தப்படி காஜல் அகர்வால்… வைரலாகும் செல்பி…

கணவனை கட்டியணைத்தப்படி  காஜல் அகர்வால்… வைரலாகும் செல்பி…

நடிகை காஜல் அகர்வால் தனது கணவரை கட்டியணைத்தப்படி எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.

கணவனை கட்டியணைத்தப்படி  காஜல் அகர்வால்… வைரலாகும் செல்பி…

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல், கடந்த ஆண்டு கொரானா நேரத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

கணவனை கட்டியணைத்தப்படி  காஜல் அகர்வால்… வைரலாகும் செல்பி…

நிறைய வாய்ப்புகள் குவிந்தாலும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடிக்கிறார். தமிழில் ‘இந்தியன் 2’ படம் மட்டும் கைவசம் இருந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார். ‘கோஷ்டி’ என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கல்யாண் இயக்கும் இப்படம் அரசியல் காமெடி படமாக உருவாகிறது.

கணவனை கட்டியணைத்தப்படி  காஜல் அகர்வால்… வைரலாகும் செல்பி…

தமிழை தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே கொரானா தொற்று காரணமாக முக்கிய ஹீரோக்களின் படங்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காஜல் நடிக்கும் ‘ஆச்சார்யா’ படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் இல்லாததால் மும்பை சென்ற காஜல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் கட்டியணைத்தப்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், தனது குடும்ப உறுப்பினர்கள் அன்பு, ஆதரவு, கவனிப்பு ஆகியவற்றை தருவதாவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share this story