என் மகனுக்கு சாதியே வேண்டாம்... 'பரியேறும் பெருமாள்' நடிகையின் தரமான செய்கை !

kayal anandhi

தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கியுள்ளதாக நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார். 

 தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆனந்தி. கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான ‘கயல்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். இந்த படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி என பெயர் மாற்றம் பெற்றார். தனது சிறந்த நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். 

kayal anandhi

இதைத்தொடர்ந்து விசாரணை, சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. கடைசியாக ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் வெளியான “கமலி பிரம் நடுக்காவேரி” படத்தில் நடித்திருந்தார். படங்களில் பிசியாக நடித்து வந்த கயல் ஆனந்தி, உதவி இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை 4 வருடம் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் சமீபத்தில் பிறந்தது. 

இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில், ஸோம்பி ரெட்டி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் இராவணக்கோட்டம் வரும் மே 12-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக்கொண்ட கயல் ஆனந்தி, தனது மகன் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

அதன்படி எனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கியுள்ளேன். தான் படித்த புத்தகங்களும், உரையாடிய சில நண்பர்களும் தான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார். இதற்கிடையே 'பரியேறும் பெருமாள்' படத்தில் சாதிக்கு எதிரானவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story