15 வருட காதலரை அறிமுகப்படுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

keerthi

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலன் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இதனைத்தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சண்டக்கோழி 2, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நாக் அஷ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றார்.

கீர்த்தி சுரேஷிற்கும் அவரது 15 வருட நண்பரான ஆண்டனி தாட்டில் ஆகிய இருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கீர்த்தி சுரேஷ் திருமணம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளிவரும் என அவரது தந்தை கூறியிருந்தார்.

 இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலன் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “15 வருட காதல்... எப்போதும் ஆண்டனி மற்றும் கீர்த்தி (lykyk)” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this story