எக்ஸ் தள பக்கத்தை மீட்டெடுத்த நடிகை குஷ்பு... அனைவருக்கும் நன்றி என பதிவு...

நடிகையும் பா.ஜ., பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில், அதனை மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில் எக்ஸ் தளத்தில் எனது இமெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றி உள்ளனர். ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தள கணக்கை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது எக்ஸ் தள பக்கத்தை மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Hi my dearest friends. Finally back here. After 3 weeks. Missed you all. Too many things have happened over these 3 weeks. Let’s connect once again and move forward. Can’t wait to share stories and hear more from you. Thank you very much for everything. Love to all. ❤️❤️ pic.twitter.com/UXSmrldQK3
— KhushbuSundar (@khushsundar) May 5, 2025
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், என் அன்பு நண்பர்களுக்கு வணக்கம். 3 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளேன். 3 வாரங்களுக்குப் பிறகு. உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணினேன். இந்த 3 வாரங்களில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. மீண்டும் ஒருமுறை இணைந்து முன்னேறுவோம். கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களிடமிருந்து மேலும் கேட்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் அன்பு என தெரிவித்துள்ளார்.