75வது படத்தில் நடிக்கும் நயன்தாரா... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !

 nayanthara

நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தார்‌. அந்த வகையில் சமீபகாலமாக வெளியான திரைப்படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் மீண்டும் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

nayanthara

தற்போது ஷாருக்கானுடன் 'ஜவான்', ஜெயம் ரவியுடன் 'இறைவன்' ஆகிய படங்களை முடித்துள்ள அவர், தனது 75வது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

nayanthara

இந்த படத்தில் நயன்தாராவுடன் நடிகர் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் இயக்குனர் அட்லியின் 'ராஜா ராணி' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் நாட் ஸ்டுடியோஸ், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. குறுகிய காலத்தில் எடுக்கப்பட இருக்கும் இந்த படம் ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

 

 

Share this story