பணிவுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் ... மாணவர்களுக்கு நடிகை நயன்தாரா கொடுத்த அட்வைஸ் !

nayanthara

எவ்வளவு உயரம் அடைந்தாலும் பணிவுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

nayanthara

தென்னிந்தியாவில் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டாராக ஆட்சி செய்து வருகிறார் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. 

nayanthara

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து கடந்த அக்டோபர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். 

nayanthara

இந்நிலையில் பிரபல கல்லூரி ஒன்றில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை என்பதை மறந்துவிடாதீர்கள். எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் எப்போதும் பணிவுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். 

 

Share this story