தங்கலான் படம் குறித்து மனம் திறந்த நடிகை பார்வதி

தங்கலான் படம் குறித்து மனம் திறந்த நடிகை பார்வதி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் லுக் போஸ்டர், டைட்டில், டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்தது. அதற்கு காரணம் படத்தில் சியான் விக்ரமின் தோற்றம். இதுவரை நாம் பார்த்திராத வகையில் அடையாளம் தெரியாத விதமாக செம லுக்கில் உள்ளார் விக்ரம். அதுமட்டுமல்லாமல் படத்தில் அவருக்க வசனமே இல்லையாம். படம் வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளிப்போனது. 

தங்கலான் படம் குறித்து மனம் திறந்த நடிகை பார்வதி

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை பார்வதி பேசியிருக்கிறார். அதில், படத்தில் நான் கங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் நான் கங்கம்மாவாக வாழ்ந்தேன் என கூறியிருக்கிறார்.

Share this story